Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி : நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி ராஜபாதையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி ராஜபாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார். இந்நிகழ்வின்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.